தென்காசியில் 14-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
1 min read
Order to remove encroachments in Tenkasi by 14th
9.11.2022
தென்காசி நகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி ஆணையாளர் எஸ்.எம்.பாரிஜான் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இது சம்பந்தமாக தென்காசி நகராட்சி ஆணையாளர் எஸ்.எம்.பாரிஜான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆக்கிரமிப்புகள்
தென்காசி நகராட்சி காசிவிஸ்வநாதர் ஆலயத்தை சுற்றியுள்ள நான்கு ரதவீதிகள் மற்றும் அம்மன் சன்னதி பஜார் . சுவாமிசன்னதி பஜார்.கூலக்கடை பஜார் . கன்னிமாரம்மன் கோவில் தெரு , மேல் ஆவணி மூலவிதி , மவுண்ட்ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் முன்பக்கம் சாலையில் கடையை நீடிப்பு செய்தும் , வியாபார பொருட்களை வைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிய வருகிறது .
மேலும் மேற்படி பகுதிகளில் பழம், பருத்தியால், சர்பத், கடலை, பூக்கடை, போன்றவற்றை தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்வதால் தென்காசி சுற்றுவட்டார பகுதியில் இருந்து அதிகப்படியான மக்கள் இப்பகுதிக்கு வந்து செல்வதால் மேற்படி பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகபடியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகிறது .
14ந் தேதிக்குள்..
மேலும் அவசர காலங்களில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது . எனவே 14.11.2022 – க்குள் நான்கு ரதவீதிகள் மற்றும் அம்மன் சன்னதி பஜார் . சுவாமிசன்னதி பபர்கூவக்கடை பஜார் . நன்னிமாரம்மன் கோலிங் தெரு . மேல ஆவணி மூலவிதி , மவுண்ட்ரோடு ஆகிய சாலைகளில் முன்புறம் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்கள் தாங்களாகவே முன் அந்து அகற்றி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தவறும் பட்சத்தில் வரும் 15.11.2022 மற்றும் 16.11.2022 ஆகிய நாட்களில் மேற்படி ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நகராட்சி மூலம் அகற்றப்படும். அதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு தாரர்களிடமிருந்து வசூல் செய்யப்படும் என்பதை இதன்மூலம் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு தென்காசி நகராட்சி ஆணையாளர் எஸ்.எம்.பாரிஜான் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.