July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

“எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அரசு எதிர்கொள்ள தயார்” – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

1 min read

“Government is ready to face no matter how heavy the rain is” – Chief Minister M.K.Stalin’s interview

13.11.2022
“எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அரசு எதிர்கொள்ள தயார்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆய்வு

முதல் அமைச்சர் முக.ஸ்டாலின் வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். சென்னை ஓட்டேரி, திருவிக நகர், கொளத்தூரில் மழை பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ஓட்டேரியில் தேங்கி உள்ள மழைநீரை ராட்சத மின்மோட்டார் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கினார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட நீர் உந்து நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சென்னை ஓட்டேரியில் உள்ள மக்களுக்கு கொசுவலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார்.

பேட்டி

அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தர். அவர் கூறியதாவது:-
மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அரசின் பணிகள் பற்றி எதிர்க்கட்சிகளின் விமர்சனம் இருக்கட்டும், மக்கள் பாராட்டினால் போதும். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும் சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது.
சீர்காழி

அதீத கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, சீர்காழி கடலூரில் நாளை ஆய்வு செய்கிறேன் அதற்காக இன்று இரவு புறப்பட்டு செல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட உள்ளார். சீர்காழியில் 44 செ.மீ மழை பெய்து வெள்ள பாதிப்புகளை ஏற்பட்ட நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.