June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட துறை முதல் அமைச்சருக்கு இணையானது

1 min read

A low pressure area formed over the Bay of Bengal

14.12.2022
உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட துறை மிகவும் சிறப்பான மகத்துவமானது ஆகும். ஒருவகையில் அது முதல் அமைச்சருக்கு இணயைானது.

உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இலாகா மாற்றம்

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அமைச்சர்கள், சேகர்பாபு, மதி வேந்தன், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், கா.ராமச்சந்திரன், பழனிவேல் தியாகராஜன், முத்துசாமி, மெய்யநாதன் ஆகியோர் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புதிட்ட செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள்,மற்றும் ஊரக கடன்கள் போன்ற துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

சிறப்பான துறை

சிறப்புதிட்ட செயலாக்கத்துறை என்பது இது கிட்டத்தட்ட ஒரு சிறப்புமிக்க பவர்மிக்க துறையாகும். இந்த துறையை வைத்து இருக்கும் அமைச்சர். எந்த துறைக்கு கீழ் வேண்டுமானாலும் நலத்திட்டங்களை அறிவிக்க முடியும்.
உதாரணமாக சுகாதாரத்துறை துறை அமைச்சர் அறநிலையத் துறையில் அறிவிப்புகளை வெளியிட முடியாது. ஆனால் இந்த சிறப்பு திட்ட செயலாக்க துறையை கையில் வைத்து இருக்கும் அமைச்சர் எந்த துறையில் வேண்டுமானாலும் சிறப்பு திட்டங்கள் என்ற பெயரில் அறிவிப்புகளை வெளியிட முடியும்.

முதல் அமைச்சர்

பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. துறை ரீதியான அறிவிப்பு இல்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். முதல்- அமைச்சர் தான் இந்த சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்தார். அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. சிறப்பு திட்டங்களை கண்காணிக்கவும் இந்த துறை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு திட்டங்களை கண்காணிக்க தனியாக ஒரு துறை தமிழ்நாட்டில்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற துறைகளுடன் இந்த துறை அமைச்சர் (முதல்-அமைச்சர்) இணைந்து செயல்படுவார்.
தற்போது முதல்-அமைச்சரிடம் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த துறை சென்றுள்ளது. இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் “சிறப்பு” திட்டங்களை கண்காணிக்க முடியும். அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக எப்படி செய்வது என்பது தொடர்பாக இந்த துறை ஆலோசனைகளை வழங்க முடியும். மற்ற துறைகளை கண்காணிக்கும் வாய்ப்பு உதயநிதிக்கு கிடைக்கும்.
இதன் மூலம் மற்ற துறைகளுடன் உதயநிதி இணைந்து பணியாற்ற முடியும். அதேபோல் சீனியர் அமைச்சர்களுடன் உதயநிதி ஸ்டாலின் இணைந்து பணியாற்ற முடியும். அதேபோல் பல துறைகளில் உதயநிதி அனுபவம் பெறுவதற்கு வசதியாக இந்த துறை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறப்புதிட்ட செயலாக்கத்துறை செயல்படும் முறை முக்கியமாக வேளாண்மை, கல்வி, நீர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில்கள் மற்றும் கட்டமைப்பு ஆகிய துறைகள் மீது அதிகம் கவனம் செலுத்துவதற்காக இந்த சிறப்பு துறை உருவாக்கப்பட்டு உள்ளது. கல்வி துறையில் ஒரு சிறப்பு அறிவிப்பை இந்த சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை அறிவிக்கிறது என்றால், கல்வித்துறையோடு இணைந்து அந்த திட்டத்தை சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை செயல்படுத்தும்.
அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும் இதற்கெனத் தனியாக ஒரு துறை தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பல்முனை சிறப்புத் திட்டங்களை அறிவியல் தொழில் நுட்பம் மூலம் செயல்படுத்தி அனைத்துத் தரப்பினரும் சமூக-பொருளாதார வளர்ச்சியும் மேம்பாடும் பெற்ற ஒரு புதுயுகத்தை நோக்கி மாநிலத்தை அழைத்துச் செல்ல விழைந்துள்ளது. வேளாண்மை, கல்வி, நீர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில்கள் மற்றும் கட்டமைப்புப் போன்ற முக்கிய துறைகளின் சீரான திட்டமிடப்பட்ட, நீடித்த வளர்ச்சியினை அடைய இத்துறை தொடர்புடைய துறைகளுடன் இணைந்து செயலாற்றும்.
இத்துறையானது, அனைத்துத் தரப்பு மக்களும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் பெற, குறிப்பாக ஏழைகள் மற்றும் மகளிர் பயனுறும் வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து, அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணித்தல் கள ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் குறித்த காலங்களில் மாவட்ட அளவில் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் கலந்தாய்வுகள் நடத்துதல். சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அலுவலர்களை, களப்பணி ஆய்வுகளை அடிக்கடி மேற்கொள்ளச் செய்து, திட்டங்களின் தரம் மற்றும் திறன் விவரங்களை ஆராய்ந்து அவை குறித்த கருத்துக்களை அரசிற்கு இத்துறை அளிக்கும்.
மேலும், திட்டங்களின் செயலாக்கத்தைச் செம்மைப்படுத்தி, மேம்படுத்தும் வழிமுறைகளை, தேவைப்படும்போது அரசிற்கு இத்துறை பரிந்துரைக்கும். இத்துறை, பிற துறைகளுடன் இணைந்து செயலாற்றுவதுடன், கள ஆய்வு விவரங்களின் அடிப்படையில், திட்டங்களில் எதிர்பார்க்கப்படும் பயன்களைப் பெற, உரிய கொள்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கான தக்க பரிந்துரைகளை வழங்கும்.
அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செவ்வனே செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அமைப்பாக இத்துறை செவ்வனே செயல்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.