‘தும்மினால் கூட விமர்சனம் செய்கிறார்கள்’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
‘They criticize even by sneezing’ – Chief Minister M.K.Stal’s speech
18.12.2022
‘தும்மினால் கூட விமர்சனம் செய்ய பலர் காத்திருக்கின்றனர்’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் இல்லத்திருமண விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
எதைச்செய்தாலும் அதில் ஒரு பிரம்மாண்டம் இருக்கும்.. அதனால் தான் அவரே கூறினார் திருமணத்திற்கு தேதி கொடுத்தேன். தேதி கொடுத்துவிட்டு எனக்கு பயம் வந்துவிட்டது. எனென்றால் இவர் (அமைச்சர் நாசர்) ஆடம்பரமாக பிரம்மாண்டமாக செய்துவிடுவாரே?. அதனால் ஏதேனும் விமர்சனம் வந்துவிடுமே. நாசராக இருந்து விமர்சனம் வந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், அமைச்சர் பொறுப்பில் இருக்கக்கூடிய நாசருக்கு ஏதோ ஒரு இழுக்கு வந்துவிட்டால் அது எனக்கு மட்டுமல்ல அது கட்சிக்கு அவப்பெயர் வந்துவிடுமே? எங்கே என்ன தவறு நடக்கும் என்று பலர் காத்திருக்கின்றனர். தும்மினால் போதும் அதை கண்டுபிடித்து அதை செல்போனில் புகைப்படம் எடுத்து அதை வெளியிடக்கூடிய ஊடகங்கள் எல்லாம் இன்று உள்ளது.
அந்த அளவிற்கு சமூகவலைதளம் பரவி வருகிறது. அதனால் திருமணம் மிகவும் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் நாசரை நான் அழைத்து கூறினேன். கட்சி கொடியை எவ்வளவு வேண்டுமானாலும் கட்டுங்கள் ஏனென்றால் கலைஞர் அந்த கொடியை ஏற்றி ஏற்றி வைத்து இந்த கழகத்தை வளர்த்திருக்கிறார். ஆனால், பேனர் வேண்டாம். கட்-அவுட் வேண்டாம். அமைதியாக ஆரவாரமில்லாமல் அதேநேரத்தில் இந்த இயக்கத்திற்கு வலு சேர்க்கின்ற வகையில் உங்கள் பணியை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதை அப்படியே கேட்டு இந்த திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள் என்று கூறினால் அதற்காகவே நாசருக்கு எனது பாராட்டு, வாழ்த்து, நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.