June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

1 min read

Sahitya Akademi Award for Kala Style Novel: Appreciation by Chief Minister M.K.Stal

22/12/2022
காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு உள்ளது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளது.

சாகித்ய அகாடமி

காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரன் காலா பாணி நாவலை இயற்றி இருந்தார். அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை, சூழல், ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் குறித்து நாவலில் இடம்பெற்றுள்ளது. 1801-ம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட நாவல் காலா பாணி ஆகும்.
தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ராஜேந்திரன். இவர் டான்சீறி சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். தற்போது காலா பாணி நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டதற்கு எழுத்தாளர் ராஜேந்திரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில், ‘காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை’ எனும் வரலாற்றுப் புதினத்துக்காக சாகித்ய அகடாமி விருதுக்குத் தேர்வாகியிருக்கும் மு. ராஜேந்திரன் ஐஏஎஸ் (ஓய்வு) அவர்களுக்கு என் பாராட்டுகள். இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் வீரம் தோய்ந்த வரலாறு மேலும் வெளிச்சம் பெறட்டும் என பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.