June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: ரூ.300 கட்டணத்தில் 2.50 லட்சம் டிக்கெட்கள் நாளை வெளியீடு

1 min read

Vaikunda Ekadasi in Tirupati: 2.50 lakh tickets to be released tomorrow at Rs.300

23.12.2022
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை யொட்டி ரூ.300 கட்டணத்தில் 2.50 லட்சம் டிக்கெட்கள் நாளை வெளியிடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நேற்றுமுன்தினம் 20,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் ஜனவரி 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.