June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றால அருவிகளில் வெள்ளம்- சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

1 min read

Flooding in Kurdala Falls- Tourists banned from bathing

26/12/2022
குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம்

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு பருவ மழை மீண்டும் பெய்ய துவங்கியுள்ளது. நேற்று இரவு குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இன்று காலையில் இருந்து விட்டு விட்டு மழை தொடர்ந்ததால் மெயின் அருவி,ஐந்தருவி, பழையகுற்றால அருவி, புலியருவி, சிற்றருவியில் ஏற்பட்ட வெள்ளம் அதிகரித்தது. இதனால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிக்கத் தடை நீடிக்கப்பட்டது.
இதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பலர் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினை செல்போன்களில் போட்டோ, வீடியோ எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்ததை காண முடிந்தது. அருவிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சிற்றாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. மேலும் இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.