June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் முன்னாள் நீதிபதி கைது

1 min read

Former judge arrested in court

9.1.2023
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அரசு அதிகாரிகளை தடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் நீதிபதி ஒருவரை குற்றாலம் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

நிலம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் கல்குவாரி பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் ஒன்றை மீட்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி சம்பவ இடத்திற்கு சென்ற போது நன்னகரம் பகுதியைச் சார்ந்த லட்சுமணன் மற்றும் அவரது மகன் முருகன் மற்றும் முன்னாள் நீதிபதி பெ.இராமராஜ் ஆகிய மூவரும் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளனர். இதில் முன்னாள் நீதிபதி பெ.இராமராஜ் உள்ளிட்ட 3 பேர் மீதும் குற்றாலம் போலீசார் வழக்கு செய்துள்ளனர்.

கைது

அதன்படி அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக நன்னகரம் பகுதியைச் சார்ந்த லட்சுமணன் மற்றும் அவரது மகன் முருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் இதில் தொடர்புடைய முன்னாள் நீதிபதி பெ.இராமராஜை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் முன்னாள் நீதிபதி இராமராஜ் நேற்று தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் குற்றாலம் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நீதிபதி முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினார்கள் நீதிபதி அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.அதன்படி போலீஸார் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.