June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ரெயில்வே பாதுகாப்பு படையில் ஆட்சேர்ப்பு என்பது வதந்தி

1 min read

The rumor is that Railway Guard Recruitment

11.1.2023
ரெயில்வே பாதுகாப்பு படையில் ஆட்சேர்ப்புக்கு அறிவிப்பு வெளியிடவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஆட் சேர்ப்பு

ரெயில்வே பாதுகாப்பு படையில் 19 ஆயிரத்து 800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு குறித்து சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் கற்பனையான செய்தி பரப்பப்படுகிறது. ஜனவரி 11-ந் தேதி கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பாக வெளியான தகவல்களை மறுத்து ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரெயில்வே பாதுகாப்பு படையில் 19 ஆயிரத்து 800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு குறித்து சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் கற்பனையான செய்தி பரப்பப்படுகிறது. ரெயில்வே பாதுகாப்புப்படையோ அல்லது ரெயில்வே அமைச்சகமோ தங்களது அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது எந்த அச்சு, மின்னணு ஊடகம் மூலமாகவும் அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை என்பது இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
எனவே அந்த தகவல் போலியானது. அனைவரும் அதை புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.