காவல்துறையை என்னிடம் இருந்தாலர் 7 நாளில் சுபஸ்ரீ கொலையா? தற்கொலையா? என்பதை சொல்லிவிடுவேன்-அண்ணாலை
1 min read
Subhasree will be killed within 7 days if I put the police under my control? Suicide? I will tell you that- Annamalai
13.1.2023
காவல்துறையை எனது கட்டுப்பாட்டில் கொடுத்தால் ஏழு நாட்களுக்குள் சுபஸ்ரீ கொலையா? தற்கொலையா? என்பதை சொல்லிவிடுவேன் என்று அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைநெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-
சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு பயனில்லை . மத்திய அரசுடன் இணைந்து புதியதாக சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தினால் பாஜக ஆதரிக்கும். இத்திட்டத்தால் பொருளாதார ரீதியில் இயங்கும் பெரிய கப்பல்களுக்கு லாபம் இருக்காது. ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஆண்டுக்கு 12 சதவீதம் வருமானம் தர வேண்டும்.
அரசியல் காரணத்திற்காக சேது சமுத்திரத் திட்டம் நிறுத்தப்பட்டதாக முதல் அமைச்சர் கூறுவது தவறானது; சேது சமுத்திரத் திட்டம் 4 ஏ என்றால் அதை பாஜக கடுமையாக எதிர்க்கும்.
சுபஸ்ரீ கொலையா?
காவல்துறையை எனது கட்டுப்பாட்டில் கொடுத்தால் ஏழு நாட்களுக்குள் சுபஸ்ரீ கொலையா? தற்கொலையா? என்பதை சொல்லிவிடுவேன் புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்..