இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 min read
Prime Minister .urges youth to study Thirukkural
16/1/2023
இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திருவள்ளுவர் தினம்
இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். திருக்குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.