ரவிஅருணன் தலைமையில் இயற்கை வள பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம்
1 min read
Ravi Arunan chaired the Natural Resources Conservation Society Advisory Meeting
24.1.2023
தென்காசி மாவட்டம் புளியரையில் இயற்கை வள பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இயற்கை வள பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் முன்னாள் தென்காசி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கே..ரவி அருணன் தலைமையில் பொதுச் செயலாளர் புளியரை ஜமீன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதால் விவசாயம் முற்றிலும் அழியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த 13.2.2023 அன்று செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் புளியரையில் மாபெரும் சாலை முற்றுகை போராட்டம் நடத்த இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் பொருளாளர் சண்முகவேல், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் வீரமணி துணை செயலாளர் மகேந்திரன், தென்காசி நகர செயலாளர் பார்த்திபன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் இசக்கி செல்வம் அமைப்பு நிர்வாக குழு உறுப்பினர் ஜோசப் ரத்தினம், பாவூர்சத்திரம் பாக்கியராஜ் சங்கரன்கோயில் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் புளியரை பகுதி செயலாளர் சதாசிவம், கருப்பசாமி பிரகலாதன் மேலகரம் ராமசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு சாம் அலெக்ஸாண்டர்,அஜீஸ்கான் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.