குற்றாலத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு
1 min read
Selection of Panchayat Union Committee Leaders Federation Administrators in Courtalam
தென்காசி மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் குற்றாலம் அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவராக வாசுதேவநல்லூர் பொன் முத்தையா பாண்டியன் செயலாளராக சங்கரன்கோவில் லாலா சங்கர பாண்டியன் பொருளாளராக ஆலங்குளம் திவ்யா மணிகண்டன் துணைச் செயலாளர் தென்காசி வல்லம் மு ஷேக் அப்துல்லா கீழப்பாவூர் காவேரி சீனித்துரை கடையநல்லூர் சுப்பம்மாள் பால்ராஜ் செயற்குழு உறுப்பினர்களாக குருவிகுளம் விஜயலட்சுமி கனகராஜ் செங்கோட்டை திருமலை செல்வி மோகன்ராஜ், மேல நீலிதநல்லூர் மாதவி முத்துராஜ், கடையம் செல்லம்மாள் முருகன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முடிவில் தென்காசி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவரும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் கூட்டமைப்பின் துணைச் செயலாளருமான வல்லம் மு சேக்அப்துல்லா அனைவருக்கும் நன்றி கூறினார்