June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரம் கொடுக்க புத்த துறவிகள் எதிர்ப்பு-போராட்டம்

1 min read

Buddhist monks protest to give power to Tamils in Sri Lanka

8.2.2023
இலங்கயில் தமிழர் பகுதிக்கு அதிகாரம் கொடுக்கும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற அலுவலகத்தை புத்த துறவிகள் முற்றுகையிட்டனர்.

13வது சட்ட திருத்தம்

இலங்கையில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அந்நாட்டின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அவர் உறுதி அளித்துள்ளார். 1987ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே 13ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வை இந்த சட்டத்திருத்தம் அளிக்கிறது. இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

முற்றுகை

இந்த நிலையில் இலங்கயில் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் நாடாளுமன்ற அலுவலகத்தை புத்த துறவிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது சட்ட திருத்தத்தின் நகலை தீவைத்து எரித்த அவர்கள், 13-வது சட்ட திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தக் கூடாது என முழக்கமிட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்திய போது, இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.