தென்காசியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
1 min read
Tamil Nadu Primary School Teachers Alliance Demonstration in Tenkasi
10.2.2023
தென்காசி மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அரச அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்டஅமைப்பின் சார்பில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜனவரி 2023 மாதத்திற்குரிய ஊதியத்தை முறையாக ஒதுக்கீடு பெற்று வழங்காத கல்வித்துறை, மற்றும் தமிழக அரசைகண்டித்தும், தென்காசி மாவட்ட கல்வி அலுவலகம் (தொடக்க கல்வி ) பல மாதங்களாக தேங்கியுள்ள கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திடத் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது..
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. தென்காசி
மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்டச் செயலாளர் க.மாரிமுத்து வரவேற்றுபேசியதுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ராஜன்ஜான், ,செல்வராஜ், ஜாஹிரா மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜேம்ஸ், ஆரோக்கியராஜ், கிருஷ்ணன் ,கீதா கோமதி மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் துரைராஜ் ,மாடசாமி , கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் மாணிக்கம் ,சுதர்சன் , தென்காசிராஜ்குமார். சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் திருமலை முருகன்,தமிழ்நாடு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் சதீஷ்குமார், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில சட்ட செயலாளர் பிச்சைக்கனி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.
கோரிக்கையை வலியுறுத்தி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி அனைவருக்கும் நன்றி உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150 பெண்ணாசிரியர் உட்பட 300 பேர் கலந்து கொண்டனர்.