வெளிமாநிலங்களுக்கு கொண்டு செலவதை தடுக்க கோரி இன்று சாலை மறியல்; ரவிஅருணன் அழைப்பு
1 min read
Road blockade today demanding to stop spending by foreign states; Ravi Arunan calls
12/2/2023
தமிழ்நாட்டில் இந்து நாள்தோறும் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தமிழக அரசு உடனடியாக தடை செய்யக்கோரி இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவிஅருணன் தலைமையில் புளியரை பகுதியில் சாலைமறியல் போராட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள அனைவரையும் அவர் அழைத்துள்ளார்.
கனிம வளங்கள்
தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான டன் கயிம வளங்கள் தினசரி கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதால் நமது வருங்கால சந்ததியினருக்கு கனிம வளங்களே இல்லாமல் போய்விரும் அபாயம் உருவாகி வருகிறது.
மேலும் தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் விலை நான்கு மடங்கு உயர்ந்துள்ளதால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஆகவே வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தமிழக அரசு உடனடியாக தடை செய்யக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவிஅருணன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் இன்று(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
நிலத்தடி நீர்
தமிழகத்தில் கல்குவாரிகளில் தரை மட்டத்திற்கு மேல் கனிம வளங்களை தோண்டிய நிலை மாறி தற்போது பூமிக்கடியில் 200 அடி ஆழம் வரை தோண்ட அரசு அனுமதிப்பதால் குவாரிகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் அடியோடு வற்றி அவை தரிசு நிலங்களாக மாறி விட்டது . இதனால் பல விவசாமிகள் வறுமை காரணமாக தங்களது நிலத்தை அந்தந்த பகுதி குவாரி உரிமையாளர்களிடமே அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டுச் செல்லும் அவலமும் அரங்கேறி இருக்கிறது. ஆகவே பூமிக்கடியில் 40 அடிக்கு மேல் தோண்டுவதை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் .
முறைகேடு
தற்போது அமலில் உள்ள பெர்மிட் முறையால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுகிறது . இதைத் தடுக்க இபாஸ் வழங்கும் நடைமுறையை உடனடியாக அழல் படுத்த வேண்டும்.
கனிம வளங்களை ஏற்றி செல்லும் ராட்சத கனரக வாகனங்கள் அதிக பாரத்துடன் அசுர வேகத்தில் செல்வதால் பொதுமக்களும் , பள்ளி செல்லும் குழந்தைகளும் , இருசக்கர வாகனங்களில் செல்வோரும் சாலையில் பயணிக்கவே அச்சப்படுகின்றனர் . கனரக வாகனங்களில் 15 யூனிட் வரை கனிம வளங்கள் ஏற்றி செல்லப்படுகிறது . இதனால் அழுத்தம் தாங்காமல் சாலைகள் சேதம் அடைவதுடன் அதன் அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீரும் மாசு படுகிறது.
இப்படி சேதமடைந்த சாலைகளை சீர் செய்யவும் , குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்யவும் அரசுக்கு ஆகும் செலவு கனிம வளத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக உள்ளது . எனவே 2 யூனிட்டிற்கு மேல் வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றுவதை தடை செய்ய வேண்டும் .
காப்பு காடுகள் மற்றும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலிருந்து 2 கிமீ தூரத்திற்கு குவாரி துவங்க அரசு அனுமதி அளிக்கக் கூடாது . குவாரிகளில் போர்வெல் இயந்திரங்களை பயன்படுத்தி மிக ஆழமாக துளையிட்டு அதிக சக்தி வாய்ந்த வெடி பொருட்களை வெடிக்க செய்வதால் அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய கிணறுகளில் விரிசல் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது . எனவே குவாரிகளில் போர்வெல் இயந்திரங்களை பயன்படுத்த அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவிஅருணன் மற்றும் பொதுச்செயலாளர் புளியரை சு.ஜமீன் ஆகியோர் கேட்டு கொண்டுள்ளனர்.