June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மணமகள் கிடைக்க வேண்டி இளைஞர்கள் பாதயாத்திரை

1 min read

Young men go on Padayatra to find a bride

11/2/2023
மணமகள் கிடைக்க வேண்டி 30 வயதுக்கு மேற்பட்டோர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பாதயாத்திரை செல்கிறார்கள்.

திருமணமாகாதவர்கள்

திருமண வயதை தாண்டியும் திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்கள் சமூகத்திலும் சொந்தக்காரர்கள் மத்தியிலும் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கே போதும் போதும் என்று ஆகிவிடும். 30 வயது ஆகியும் இன்னும் பெண் கிடைக்கவில்யே என்று ஏங்கும் ஆண்கள் பலர் உண்டு.
அதேபோல் கர்நாடக மாநிலத்தில் திருமணம் செய்யப் பெண் கிடைக்காமல் ஏராளமான இளைஞர்கள் தவித்து வருவதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

திருமணமாகாத 30 வயதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கர்நாடக மாநிலத்தில்தான் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. மணப்பெண் கிடைக்காத இந்த இளைஞர்கள் தற்போது நூதன முயற்சி ஒன்றைச் செய்து வருகின்றனர்.

பாதயாத்திரை

இந்நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குப் பாதயாத்திரை செல்ல தற்போது தீர்மானித்துள்ளனர். மாண்டியா தாலுகாவில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் பாதயாத்திரை செல்ல உள்ளனர். மணமகள் வேண்டி மூன்று நாட்கள் இந்த இளைஞர்கள் அந்த கோயிலுக்குப் பாதயாத்திரையாகச் சொல்ல உள்ளனர். இந்த யாத்திரைக்குப் பிரம்மச்சாரிகள் பாதயாத்திரை எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 23ஆம் தேதி அன்று இந்த பாதயாத்திரை தொடங்க உள்ளது. 30 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாதவர்கள் இந்த பாதயாத்திரை கலந்து கொள்ளலாம் என மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாதயாத்திரையில் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக மூன்று நாட்களும் மூன்று வேளை உணவும், தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.