ஆற்காட்டில் ரூ15000 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது
1 min read
District Collector arrested for accepting bribe of Rs 15000 in Arcot
15.2.2023
ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டாமாற்றம் செய்ய ரூ15000லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
சோதனை
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செய்யானந்தம் பகுதியை சேர்ந்த சகாதேவனுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு அருகே இருக்கும் மாங்காட்டில் சுமார் 51 சென்ட் நிலம் உள்ளது அந்த நிலமானது நில உடமை மேப்பாடு திட்டத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளது எனவும் அதனை திருத்தம் செய்து தங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு சகாதேவன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த வேலூரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகவும் பின்பு மாவட்டம் புதிதாக பிரித்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டதை தொடர்பாக ஆற்காடு வட்டாட்சியர் சுரேஷ் என்பவரை சகாதேவன் சந்தித்துப் பேசியதாகவும் வட்டாட்சியர் சுரேஷ் பட்டாமாற்றம் செய்வதற்கு ரூபாய்,25 ஆயிரம் லஞ்சமாக கேட்டு பிறகு ரூபாய் 15 ஆயிரம் சகாதேவன் வழங்குவதாக கூறப்படுகிறது
பின்னர் இதுகுறித்து சகாதேவன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ஆலோசனையின் பேரில் இரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சகாதேவன் நேற்று மாலை வட்டாட்சியர் சுரேஷ் என்பவரிடம் வழங்க முற்பட்டார் அதற்குள் சுரேஷ் தன்னிடம் வேண்டமென்றும் அவரது ஒட்டுநர் பார்த்தீபனிடம் தருமாறு கூறியுள்ளார்
அதனைத்தொடர்ந்து சகாதேவன் வட்டாட்சியர் ஓட்டுநர் பார்த்தீபனிடம் பணத்தை வழங்கி உள்ளார் அப்போது மறைந்திருந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பி டிஎஸ்பி கணேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் விஜயலஷ்மி ஆகிய தலைமையிலானப் போலீஸார் பார்த்தீபனை கையும்களவுமாகப்பிடித்து விசாரத்து அதில் தொடர்புடைய வட்டாட்சியர் சுரேஷ் மற்றும் டிரைவர் பார்த்தீபன் ஆகிய இருவரையும் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்தனர் இதற்கிடையே வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடியாக புகுந்து வட்டாட்சியரை கைது செய்த சம்பவம் ஆற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.