ஈரோடு கிழக்கில் அனுமதியின்றி திறக்கப்பட்ட 14 திமுக-அதிமுக பணிமனைகளுக்கு சீல்
1 min read
14 DMK-AIADMK workshops opened without permission in Erode East sealed
16.2.2023
ஈரோடு கிழக்கில் அனுமதியின்றி திறக்கப்பட்ட 14 திமுக-அதிமுக பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடக்கிறது இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது அன்று மாலை முதல் கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. மேலும் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகள் விதித்தது. அதன்படி ரூ.50,000 க்கு மேல் பணம் கொண்டு சென்றாள் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் இல்லை என்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் மேலும் ஒரு 10 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் தேர்தல் அலுவலக திறப்பு பிரசாரம் வாகனங்கள் பொதுக்கூட்டத்துக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் தற்போது தீவனம் அடைந்து வரும் நிலையில் திமுக அதிமுக, தேமுதிக நாம் தமிழர் கட்சி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் பணியாற்றுவதற்காக தேர்தல் பணிமனைகள் திறக்கப்பட்டன.
சீல் வைப்பு
இந்த பனி மனைகளில் பல பணிமனைகள் அனுமதி இன்றி செயல்படுவதாக பறக்கும் படையினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் செய்திருந்தனர். இதனை அடுத்து அவர் ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் நடவடிக்கை எடுக்க கேட்டிருந்தார். அதன்படி அவர் உத்தரவின் பெயரில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர்கள் பணிமனைகளை ரகசியமாக கண்காணித்தனர். அதில் திமுக சார்பில் 10 இடங்களிலும் அதிமுக சார்பில் 4 இடங்களிலும் அனுமதி இன்றி தேர்தல் பணிமனைகள் திறந்திருப்பது தெரியவந்தது.
திமுக சார்பில் கே எஸ் நகர், கே என் கே ரோடு, பிபி அக்ரஹாரம் பகுதியில் உள்ள வன்னியர் தெரு, வைரா பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள பணிமனை, அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள பணிமனை, சிந்தன் நகர், வரதப்பா தெரு, பெரியார் நகர் அருகே சாந்தன் கரடு, கருங்கல்பாளையம் கள்ளுக்கடைமேடு ஆகிய இடங்களில் திமுக பணிமனைகள் அனுமதி இன்றி செயல்பட்டதால் அவை பூட்டி சீல் வைக்கப்பட்டது.இதேபோல் திருவள்ளுவர் நகர் கல்யாணசுந்தரம் வீதியில் உள்ள பணிமனை ஆலமரத்து தெரு மணல்மேடு ஆகிய இடங்களில் உள்ள அதிமுக பணிமனைகளும் அனுமதி இன்றி செயல்பட்டதால் போட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் உடன் துணை ராணுவத்தினரும் குறிக்கப்பட்டு இருந்தனர்.