திருவள்ளூர் அருகே 4வயது மகனுடன் கணவன்-மனைவி தற்கொலை
1 min read
Husband and wife commit suicide with 4-year-old son near Tiruvallur
23.2,2023
திருவள்ளூர் அருகே கூலி தொழிலாளிமற்றும் அவரது மனைவி ஆகியோர் தனது நான்கு வயது மகனுடன் ஒரே வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து மப்பேடு காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பேர் தற்கொலை
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர்ஒன்றியம் திருமணிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வாசனம் பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர் கலையரசன் (வயது 37) . கூலித் தொழிலாளி இவரது மனைவி நித்யா (30) இந்த தம்பதியினருக்கு யாமநாத் (4) என்ற ஒரே ஆண் குழந்தை இருந்தது.
இவர்கள் வீட்டுக் கதவு நேற்று காலை வெகு நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தேகமடைந்தனர். அதன் பின்னர் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது கொக்கி ஒன்றில் நயலான் கயிறு கட்டப்பட்ட நிலையில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு நிலையில் இறந்து கிடப்பதும் அதன் அருகே உள்ள கட்டிலில் குழந்தை இறந்து கிடப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணை
இது குறித்த தகவல் உடனடியாக மப்பேடு காவல்துறையினருக்குதெரிவிக்கப்பட்டது சம்பவ பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் மூவரது சடலத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் நான்கு வயதான ஆண் குழந்தை முதலில் இறந்துள்ளதாகவும் அதன் பின்னரே கணவன் மனைவி இருவரும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. முதலில் குழந்தைக்கு சாப்பாடு அல்லது பாலில் ஏதேனும் விஷம் கலந்து கொடுத்து குழந்தை இறந்த பிறகு கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடன் தொல்லை காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து சடலத்தை கைப்பற்றி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.