சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு- சோனியா காந்தி, ராகுல் பங்கேற்கவில்லை
1 min read
Congress party convention in Chhattisgarh- Sonia Gandhi, Rahul absent
24/2/2023
சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-ஆவது மாநாடு இன்று தொடங்கியது. இதில் சோனியாகாந்தி, ராகுல் பங்கேற்றகிவல்லை.
காங்கிரஸ் மாநாடு
சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-ஆவது மாநாடு நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலுக்கான தெளிவான வியூகம் வகுப்பதற்காக இந்தக் கூட்டம் கூடியுள்ளது.
காரிய கமிட்டியின் முதல் நாளான இன்று மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் வழிகாட்டுதல் குழு கூட்டம் தொடங்கியுள்ளது. நேற்றைய கூட்டத்தில் சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில் கட்சியில் உயா்பதவிகளுக்குத் தோ்தல் நடத்த வேண்டுமா இல்லையா என முடிவு எடுக்கபட உள்ளது. காரியக் கமிட்டிக்கு தோ்தல் மூலமே தோ்வு செய்யப்பட வேண்டும் என்று இளைஞா்களும், நியமனம் மூலமே நடைபெற வேண்டும் என்று மூத்த தலைவா்களும் வலியுறுத்தி வருவதால் காந்தி குடும்பத்தினரின் தலையீடு வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக காந்தி குடும்பத்தினர் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. வழிகாட்டுதல் கூட்டம் முடிந்த பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிகிறது.