ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்கள் ஒரு வாக்குக்கூட பெறவில்லை
1 min read
12 candidates did not get a single vote in the Erode East by-election
2.3.2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 12 வேட்பாளர்கள் இதுவரை வெளியான முடிவுகளின்படி ஒரு வாக்குக்கூட பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.இந்தத் தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால் முடிவுகள் தாமதமாக வாய்ப்புள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி 2 சுற்றுகளின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியான நிலையில், போட்டியிட்ட 77 பேரில் 12 வேட்பாளர்களுக்கு இதுவரை ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை என்றும், அவர்களது கணக்கு பூஜ்யமாகவே இருந்ததாகவும் தெரிய வந்துளள்து.
ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு பிப்ரவரி 27 -ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் 74.79 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.