திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் கோவில் நிலம் மீட்பு
1 min read
Thirukkalukkunram Vedakriswarar temple land recovery
2.3.2023
திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான இராஜகோபால் செட்டியார் சத்திரம் சொத்து மீட்கப்பட்டது.
திருக்கழுக்குன்றம்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் பெரியவர்களால் மற்றும் ஆன்மீக அன்பர்களால் – திருக்கோயிலுக்கு வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் மற்றும் திருவிழாக்களுக்கு வரும் பக்தர்கள் என தங்குவதற்கும், இளைப்பாறவும், அன்னதானம் வழங்கிடவும் என தானமாக வழங்கப்பட்ட சத்திரம் மற்றும் கட்டிடங்கள் உள்ளன.
அக்கட்டிடங்கள் சில நபர்களால் ஆக்கிரமிக்கப்படுவதும் அதை கோயில் நிர்வாகம் மீட்பதும் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் தாழக்கோயில் சன்னதித் தெரு, பகுதியில் ஒரு ஏக்கர் 10 சென்ட் நிலம் சத்திரமாக இராஜகோபால் செட்டியார் என்பவரால் 1909-ஆண்டு உயில் சாசனம் எழுதி சமய அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளார். இந்த
இடத்தின் மூலம் கிடைக்கும் வருவாயினை கொண்டு
திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும்
பிரம்மோற்சவத்தில் (சித்திரைப் பெருவிழா) 10 நாட்களுக்கும் திருக்கழுக்குன்றம் சன்னதித் தெருவில் அமைந்துள்ள சத்திரத்தில் அனைத்து வகுப்பினருக்கு உணவு
அளித்தல் மற்றும் உற்சவம் செய்துவர வேண்டியது என உயில் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அறக்கட்டளை
சொத்துக்களை எக்காலத்திலும் விற்பனை செய்யக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உயில் சாசனப்படி செய்ய வேண்டிய கட்டளைகளையும்,
உற்சவங்களையும் அறக்கட்டளையினை நிர்வகித்து வந்தவர்கள் செய்ய தவறிவிட்டனர்.
சத்திரத்தினையும் முறையாக பராமரிக்காமல் சத்திரத்தின் ஒரு பகுதியினை பல நபர்களுக்கு விற்பனை செய்தும், பட்டா மாற்றம் செய்தும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
மீட்பு
இந்த விபரம் திருக்கோயில் நிர்வாகத்திற்கு தெரியவந்ததன்பேரில், சட்டவிரோதமாக விற்பனை
செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் .பொ.இலட்சுமி
காந்த பாரதிதாசன் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலர் சக்திவேல் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தை மீட்டு திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகையினை வைத்தனர்.. மீட்கப்பட்ட இந்த இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 10.00 கோடி ஆகும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.