நாகாலாந்தில் அனைத்து கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு – எதிர்க்கட்சி இல்லா ஆட்சி அமைகிறது
1 min read
All parties support BJP alliance in Nagaland – Forms government without opposition
7.2.2023
நாகாலாந்தில் அனைத்து கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதால் எதிர்க்கட்சி இல்லா ஆட்சி அமைகிறது.
பாரதீய ஜனதா ஆட்சி
நாகாலாந்து மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி(என்டிபிபி) -பாஜக கூட்டணி மொத்தம் 37 இடங்களில் வெற்றி பெற்றது. என்சிபி-7, என்பிபி-5, எல்ஜேபி(ராம் விலாஸ்), நாகா மக்கள் முன்னணி(என்பிஎஃப்), ஆர்பிஐ(அத்வாலே) ஆகிய கட்சிகள் தலா இரண்டு இடங்களிலும், ஜேடி(ஐ) ஒரு இடத்திலும், சுயேட்சைகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.
இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வெற்றி பெற்ற பிற கட்சிகள் தங்களின் நிபந்தனையற்ற ஆதரவினை அளிக்க முன்வந்துள்ளன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால் நாகாலாந்தில் மீண்டும் ஒரு அனைத்துக் கட்சி ஆட்சி அமைய உள்ளது.
இதற்கு முன்பாக ஆட்சி அமைத்த பிறகுதான் எதிர்கட்சிகள் இல்லாத நிலை உருவானது. ஆனால் இம்முறை ஆட்சி அமைக்கப்படுவதற்கு முன்பாகவே எதிர்கட்சிகள் இல்லாத நிலை உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.