June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

20 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 70 வயது முதியவர் கைது

1 min read

A 70-year-old man was arrested for threatening and raping a 20-year-old woman

1.4.2023
20 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

கணவரை பிரி்ந்த பெண்

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் ஊராட்சியில் கோட்டை காலனி பகுதியில் வசித்து வரும் இருதயராஜ் இவரது மனைவி இறந்து சில ஆண்டுகள் ஆகிறது இவருக்கு ஜான்சி (வயது 23) சத்தியவதி(20) என்கிற இரண்டு மகள்களும் கபாலி(19) என்கிற ஒரு மகனும் உள்ளனர்
இரண்டாவது மகளான 20 வயது நிரம்பிய சத்தியவதி முன் காக்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்த போது மாலந்துறை சேர்ந்த மதுபாலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் மூன்று மாத காலத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீடான திருப்பாச்சூருக்கு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
தந்தை அக்கா தம்பி உடன் ஏழாம் வகுப்பு வரை படித்த சத்தியவதி ஆடு மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

பலாத்காரம்

அந்த பகுதியில் வயலில் விவசாயம் பார்த்து வந்த அந்தப் பெண் குடியிருக்கும் அதே பகுதியில் வசிக்கும் திமுகவின் கிளை பிரதிநிதியும் முன்னாள் கிராம நாட்டாமையும் மான சுமார் 70 வயதான கிருஷ்ணன் என்பவர் அந்த இளம் பெண்ணை அவர் கணவரோடு சேர்த்து வைப்பதாக கூறினார். பின்னர் தன் ஆசைக்கு இணங்கும்படி கூறியுள்ளார். அந்தப் பெண் ஆசைக்கு இணங்காததால் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பணம்

மேலும் அந்தப் பெண்ணின் தகப்பனிடம் உன் மகளை அவள் கணவனோடு சேர்த்து வைக்கிறேன் என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார் அந்த குடும்பத்தினர் பணம் இல்லாததால் ஒவ்வொரு முறையும் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக வளர்த்து வந்த ஆடுகளை விற்று ஒவ்வொரு முறையும் பணத்தை கொடுத்துள்ளனர் சுமார் 60 ஆடுகள் வளர்த்து வந்த நிலையில் 40 ஆடுகளை விற்று தன் மகளை எப்படியாவது அவள் கணவருடன் சேர்த்து வைப்பார் என்று நம்பி கொடுத்துள்ளனர்
ஆனால் இந்த கிருஷ்ணன் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு இளம் பெண்ணை அழைத்து சென்று திருவள்ளூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியில் அரை எடுத்து பலமுறை மிரட்டி உல்லாசம் அனுபவித்து உள்ளான்

இதனால் அந்தப் பெண் கர்ப்பமடைந்து எட்டு மாதத்தில் குறை பிரசவமாக கடந்த திங்கட்கிழமை
வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்து இறந்துள்ளது இதையும் வெளியே கூறினால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அந்தப் பெண் வீட்டின் அருகே புதைக்க வைத்துள்ளான் மேலும் அந்த குடும்பம் மிகவும் பயம் மிகுந்தவர்களாயும் வெகிலியாகவும் படிப்பறிவு இல்லாதவர்களாக உள்ளதால் அந்த முதியவரை எதிற்க்கவும் முடியாமல் மருத்துவமனைக்கு சென்று தன் உடலுக்கு சிகிச்சை கூட எடுத்துக் கொள்ள தைரியம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது

கைது

அதன் பிறகு இந்த தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கிருஷ்ணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர் பின்பு பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் ஊர் முன்னாள் நாட்டாமை செய்த இந்த வேலையால் கிராம மக்கள் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.