June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

இலங்கை தமிழர் 10 பேர் தனுஷ்கோடி வருகை

1 min read

10 Sri Lankan Tamils visit Dhanushkodi

6.5.2023
இலங்கை தமிழர் 10 படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை மணல் திட்டில் நேற்று வந்திறங்கினர்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமம் அடைந்து உள்ளனர்.

இதனால் 2022 மார்ச் 22 முதல் இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி பகுதியில் அகதிகளாக வந்து இறங்குகின்றனர்.
இந்நிலையில் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 2 ஆண், 4 பெண், 3 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை என 3 குடும்பத்தினர் முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து நேற்று இரவு 8 மணியளவில் பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல் முனை முதல் மணல் திட்டில் வந்திறங்கி வெகு நேரம் காத்திருந்தனர். அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நாட்டுப்படகு மீனவர்கள் மெரைன் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் மெரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் ஒன்றாம் மணல் திட்டிற்கு படகில் சென்று இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்தனர். பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலிருந்து தமிழகம் வந்த அகதிகளின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.