ஆவுடையானூர் தபால் நிலையத்தை தரம் உயர்த்த மதிமுக கோரிக்கை
1 min read
Madhyamik demand to upgrade Audayanur post office
6.5.2023
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூர் பகுதி நேர கிளை தபால் அலுவலகத்தை தரம் உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம.உதயசூரியன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம.உதயசூரியன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.யிடம் அளித்த மனுவினை, அவர் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சிப்பகுதியானது அதிக வர்த்தக நடவடிக்கை கொண்ட வளர்ந்து வரும்பகுதியாகும். இங்கு தற்போது பகுதி நேர கிளை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தபால் அலுவலக சேவைகளை பூர்த்தி செய்வதில் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே இந்த தபால் அலுவலகத்தை தரம் உயர்த்தி முழு நேர தபால் அலுவலகமாக செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம.உதயசூரியன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனுவினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளார்.
முத்துசாமி, நிருபர்.