June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் திமுக – அதிமுக கடும் மோதல்- தலைவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

1 min read

Red Fort Town Council meeting DMK – AIADMK fierce conflict – Police registered a case against 5 people including the leader

12.5.2023
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் நடைபெற்ற திட்டக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் திமுக அதிமுக பாஜக கவுன்சிலர்கள்
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இருதரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக செங்கோட்டை போலீசார் தலைவர் இராமலெட்சுமி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

நகரசபை தலைவி

கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 24 வார்டுகளை உள்ளடக்கிய செங்கோட்டை நகர்மன்ற தலைவி பதவிக்கு தி.மு.க வேட்பாளராக முன்னாள் நகர தி.மு.க நகர்மன்றத்தலைவரும், திமுக ,தலைமை பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.ரஹீம் மருமகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க – பா.ஜ.க தனித்து போட்டி போட்டது ஆனால் செங்கோட்டை நகராட்சியில் மட்டும் அ.தி.மு.க – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இதனால் கடுமையான போட்டி இருந்த போதும் துணிச்சலோடு தேர்தலை எதிர் கொண்ட தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு பெரும்பான்மை குறையவே அதை பயன்படுத்தி அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற ராமலெட்சுமிக்கு ஆதரவு தெரிவித்து நகர்மன்ற தலைவியாக தேர்வு செய்தனர்.

இருந்த நிலையில் செங்கோட்டை நகர மன்றத் தலைவர் இராமலெட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க வில் இணைந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க – பா.ஜ.க கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை தாக்க முற்பட்டனர்.

நடைபெற்று முடிந்த நகர்மன்ற தலைவர் தேர்தலில இராமலட்சுமியை நகர் மன்ற தலைவராக தேர்ந்தெடுக்க தீவிரமாக செயல்பட்ட அதிமுக பாஜக உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முற்பட்ட நேரத்தில் இராமலட்சுமிக்கு எதிராக நகர் மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் செங்கோட்டை நகர மன்ற தலைவரும், நகர திமுக செயலாளருமான எஸ்எம் ரஹீம் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவர் இராமலட்சுமிக்கு ஆதரவாக அவருக்கு பாதுகாப்பு அரணாக நின்று செயல்பட்டது அரசியல் களத்தில் அதிசயமாக இருந்தது. மேலும் இந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதோடு அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பதை எடுத்துக் காட்டியது.

மேலும் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக செங்கோட்டை நகர் மன்ற தலைவர் இராமலட்சுமி செங்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக கவுன்சிலர்கள் சுடர் ஒளி, முத்துப்பாண்டி பாஜக கவுன்சிலர் ராம்குமார் ஆகியோர் மீது ஐந்து பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மேலும் செங்கோட்டை நகராட்சி , 3 வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சுடர் ஒளி கொடுத்த புகாரின் அடிப்படையில் செங்கோட்டை நகர்மன்ற தலைவர் இராமலட்சுமி மற்றும் திமுக கவுன்சிலர் பேபி ராஜப் பாத்திமா ஆகியோர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு.பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் செங்கோட்டை பகுதியில் மட்டுமின்றி தென்காசி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

-முத்துசாமி, நிருபர், தென்காசி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.