June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஏழைகளின் சக்தியால் காங்கிரஸ் வென்றது: ராகுல் காந்தி கருத்து

1 min read

Congress won by the power of the poor: Rahul Gandhi

13.5.2023
ஏழைகளின் சக்தியால் காங்கிரஸ் வென்றது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல்காந்தி

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, அம்மாநில மக்களுக்கு தனது நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் மேலும் கூறியதாவது:-

வெறுப்புணர்வுகளை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வெறுப்பு உணர்வு இல்லாமல் கர்நாடக தேர்தலில் போட்டியிட்டோம். மக்களின் சக்தி வெற்றி பெற்று இருக்கிறது. இதே நிலை மற்ற மாநிலங்களிலும் தொடரும். காங்கிரஸ் கட்சி ஏழை மக்களின் பிரச்சனைகளுக்காக போராடி வந்தது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் விரைந்து நிறைவேற்றப்படும்/
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.