செங்கோட்டை அரசு பள்ளி கட்டிட பராமரிப்பு பணிக்கு நிதி வழங்கல்
1 min read
Providing funds for building maintenance work of Red Fort Government Schoo
18.5.2023
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மேலச் செங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் தரைத்தள பகுதியின் கதவு மற்றும் ஜன்னல்களுக்கு வர்ணம் பூசும் பணிக்காக செங்கோட்டை திமுக நகரச் செயலாளா் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசனின் தந்தை எஸ்.கே.ஆறுமுகத் தேவர் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் பத்தாயிரம் ரொக்கப்பணத்தை வழங்கினார்.
செங்கோட்டை நகராட்சி மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் தரைத்தள பகுதியின் கதவு மற்றும் ஜன்னல்களுக்கு வர்ணம் பூசும் பணிக்காக வர்ணம் பூசும் ஒப்பந்தகாரர் நன்னகரம் சி.முத்துவேல்ராஜாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் வி.எஸ்.ராஜனிடம் ரூபாய் பத்தாயிரத்தை செங்கோட்டை நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசனின் தந்தையார் எஸ்.கே.ஆறுமுகத்தேவர் வழங்கினார்.
மேலும் பள்ளியின் வளா்ச்சி மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு எப்போதும் என்னை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம், என்னால் ஆன உதவிகளை செய்யக் காத்திருக்கின்றேன் என பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறினார். உடன் வார்டு நிர்வாகிகள் ஆ.சண்முகராஜா, ஆ.சங்கர்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனா்.
-முத்துசாமி, நிருபர்,
l