தென்காசியில் ரூ. 22.05 கோடியில்5 மாடிகளுடன் மகப்பேறு மையம்- அமைச்சர் தொடங்கி வைத்தார்
1 min read
Tenkasi Rs. 22.05 crores-Maternity center with 5 floors- Minister inaugurated
19.5.2023
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனயில் ரூபாய் 22.05 கோடியில் ஒருங்கிணைந்த மகப்பேறு மையம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான பணியினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துறை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தி.உதய கிருஷ்ணன், தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர் சாதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து ரூபாய் 22.05 கோடி செலவில் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மையம், குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான, பூமி பூஜை மற்றும் கட்டிடம் கட்டும் பணிக்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு மருத்துவ துறைக்கு என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் 22.05 கோடியில் ஒருங்கிணைந்த மகப்பேறு மையம், குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் தரைத்தளம் உள்ளிட்ட ஐந்து தளங்களில் பதிவு செய்யும் அறை, காத்திருக்கும் அறை, கூட்ட அரங்கு, ஓய்வறை முதலமைச்சரின் காப்பீடு சிகிச்சை பகுதி, சுத்தப்படுத்தப்பட்ட துணி துவைக்கும் அறை, அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வகம், மற்றும் 250 படுக்கை வசதிகளுடன் கூடிய அறைகள், மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேன் வசதி, யோகா, சித்தமருத்துவ பிரிவு, பேறுகால அறை, அறுவை சிகிச்சை அறை, குடும்ப கட்டுப்பாடு வார்டு, பிரசவ அறுவை சிகிச்சை வார்டு, பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பகுதி, பொதுமக்கள், பெண்கள் மாற்று திறனாளிகள், போன்றோர் மருத்துவமனையின் அனைத்து பகுதிக்கும் எளிதில் செல்வதற்காக சாய் தள வசதி, மின் தூக்கி வசதிகள், உள்ளிட்ட வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ், மாவட்ட சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அறிவுரை நம்பி, உறைவிட மருத்துவர் ஜெயக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ. ஆறுமுகச்சாமி ,தலைமை பொதுக்குழு உறுப்பினர் செங்கோட்டை எஸ் எம் ரஹீம், சீவநல்லூர் கோ சாமித்துரை, தமிழ்ச்செல்வி, தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் மு.ஷேக் அப்துல்லா, ஒன்றிய செயலாளர்கள் தென்காசி கிழக்கு ஆர் எம் அழகு சுந்தரம், தென்காசி மேற்கு வல்லம் எம். திவான் ஒலி, கீழப்பாவூர் க.சீனித்துரை, கடையம் மகேஷ் மாயவன், முன்னாள் ஒன்றிய செயலாளர் காசிதர்மம் துரை, செங்கோட்டை நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆ. வெங்கடேசன், மேலகரம் திமுக செயலாளர் இ.சுடலை, திமுக தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், மாணவரணி துணை அமைப்பாளர் பி எஸ் மாரியப்பன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் தென்காசி கே.மோகன்ராஜ், வடகரை ராமர், ராமராஜ், நகர பொருளாளர் அ.சேக்பரீத், காங்கிரஸ் நிர்வாகிகள் ஈஸ்வரன் காஜா மைதீன் பிரபாகரன் சபரி முருகேசன், சிவாஜி சமூகநல மன்றம் என்.கணேசன், கு.மூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் அனைவருக்கும் நன்றி கூறினார்.