சாம்பவர்வடகரையில் சாலையில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை
1 min read
A baby was found dead on the road in Sampawarwadkara
21.5.2023
தென்காசி அருகே சாம்பவர்வடகரையில் சாலையில் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது.
குழந்தை
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை மாஞ்சோலை தெருவில் இன்று காலை தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது. துணியில் சுற்றப்பட்டி ருந்த குழந்தையை ஒரு நாய் இழுத்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் நாயை விரட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்ற வர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.