தென்காசி மாவட்ட பள்ளிபேருந்துகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
1 min read
Tenkasi District School Buses Inspection by District Governor
20.5.2023
தென்காசி மாவட்ட பள்ளிகளின் பேரூந்துகளை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தென்காரி ஐ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பள்ளிப் பேருந்துகளை மாவட்ட தென்காசி ஆட்சித்தலைவர் துரைரவிசந்திரன பார்வையிட்டு வாகனத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கான வாதிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது;-
பள்ளி வாகன ஓட்டுநர்கள் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச்செல்லும்போது பத்திரமாகவும் , கவனமாகவும் அழைத்துச்செல்லவேண்டும் . கல்வி ஆண்டை தொடங்குவதற்கு முன்னர் , பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்வது வழக்கமான . ஒரு நிகழ்வாகும் . அதை நமது தென்காசி மாவட்டத்தில் இன்றைய தினம் செய்து கொண்டிருக்கின்றோம் .
இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் , வட்டாரப் போக்குவரத்து அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர் , துணைக் காவல் கண்காணிப்பாளர் . உதவி மாவட்ட அலுவலர் , தீயணைப்பு துறை , நேசமுக உதலியாளர் , கண்காணிப்பாளர் , உதவியாளர் , மற்றும் தென்காசி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோருடன் இணைந்து பேருந்துகளை ஆய்வு செய்யப்பட்டது.
தென்காரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 450 பள்ளி வாகளங்களில் இன்று 136 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது . பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க ஓட்டுநர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது . அதுமட்டுமல்லாமல் , வாகனத்தில் படிக்கட்டு , அவசர வழி , சிசிடிவி கேமரா , வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளதா என்றும் மற்றும் முதலுதவி பெட்டியில் மருந்துகள் சரியாக இருக்கிறதா என்றும் சரிபார்க்கப்பட்டது .
வாகனத்தின் முன்புறமும் மற்றும் பின்புறமுள் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர் . ஓட்டுநர் வாகனத்தை இயக்குவதற்கு முன்பும் , பின்பும் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்யப்பட்டது . மாவட்ட தீயணைப்புத்துறை உதவி அலுவலர் , பள்ளிவாகனத்தில் தீ ஏற்பட்டால் பளவி மாணவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்தும் இன்றைய தேதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுனர்களுக்கு நேரடியாக செய்முறை விளக்கம் மூலம் காண்பிக்கப்பட்டு , மேற்படி அலுவலரால் அனைந்து ஓட்டுநர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது
இந்த ஆய்வில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன் , தென்காசி , வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன், , தென்காசி , மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பு , தென்காசி துணை காவல் கணிகாணிப்பாளர் நாகசங்கர், நென்காசி உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் , தென்காரி , தீயணைப்பு துறை உதவி அலுவலர் .ம.மகாலிங்கம் , நேர்முக உதவியாளர் கணிகாணிப்பாளர் ,ஆ.முருகன் உதவியாளர் க.சிவஆறுமுகம் , மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி ஆகியோர் கலந்துகொண்டனர் .