தோரணமலை முருகன் கோவிலில் 10 மற்றும் பிளஸ 2 மாணவர்களுக்கு பாராட்டு விழா
1 min read
Appreciation ceremony for 10 and Plus 2 students at Thoranamalai Murugan Temple
22.5.2023
தென்காசி தோரணமலை முருகன் கோவிலில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தோரணமலை
தென்காசி மாவட்டம், தென்காசி – கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில் இந்த கோயில் புராணங்கள் மற்றும் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் ஆகும். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தோரணமலை ஸ்ரீ முருகனை வழிபட்டு செல்கின்றனர்.
இந்த கோவிலில் அகஸ்தியர் தேரையர் போன்ற சித்தர்களும் முனிவர்களும் வழிபடப்பட்ட பெருமை உடையதாகும். தோரணமலை முருகன் கோவில் பக்தர்களும் கோவில் நிர்வாகமும் இணைந்து ஆன்மீகப் பணிகள் மட்டுமன்றி தொடர்ந்து பல்வேறு அறப்பணிகளும் சமூக பணிகளும் செய்து வருகின்றனர்.
கோடை விழா
தற்போது கோடைவிடுமுறையையொட்டி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று (21-ந் தேதி) 2023 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் நிகழ்சசி நடந்தது. அதாவது தோரணமலை முருகன் கோவில் சார்பாக அதிக மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்த மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் டாக்டர் விஜயலட்சுமி, குற்றாலம் ஸ்ரீபராசக்தி கல்லூரி முன்னாள் பேராசிரியை கயற்கன்னி தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் பல்வேறு நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறினர்.வந்திருந்த பக்தர் களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் காலை முதல் மாலை வரை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கடையம், பாவூர்சத்திரம், ஆழ்வார்குறிச்சி, குற்றாலம், புல்லுக்காட்டு வலசை, மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் சிறப்பாக செய்திருந்தார்