திருமலைக்கோவில் வைகாசி விசாகம் பால் குடத்திற்கு கட்டணம்; ஆட்சியரிடம் பாஜக புகார்
1 min read
Fee for Vaikasi Visagam Milk Jug in Tirumalaikovil; BJP complains to the Collector
23.5.2023
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை குமாரசாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்து வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறையை கைவிட வேண்டும் என பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது
திருமலை
பண்பொழி திருமலைகோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வருவது வழக்கம்
இந்நிலையில் பால் குடத்திற்கு கட்டணம் விதிக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கோமதி அம்மாள் அறிவித்துள்ளார். மேலும் இவர் கோவிலுக்கு வரும் பக்தர்களை அவமரியாதை செய்யும் வகையில் பேசி வருகிறார்.எனவே இவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு ஆண்டாண்டு காலமாக வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியை எவ்வித இடையூறும் இன்றி சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அச்சன்புதூர் பாஜக தலைவரும் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினருமான சிங்கப்பூர் எம் தங்கம் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட இந்துமுன்னணி துணைத் தலைவர் இசக்கிமுத்து, பாஜக நிர்வாகிகள் இசக்கித்துரை, சுப்பிரமணிய பாண்டியன், பார்வதி, கனிராஜ், பாலமுருகன்,
மற்றும் பாஜக தொண்டர்கள் அச்சன்புதூர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்