மேகதாது அணை கட்ட முயற்சி செய்தால் தடுத்து நிறுத்துவோம்-குற்றாலத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
1 min read
People Will Teach BJP Govt A Lesson In 2024 Parliamentary Elections – Peter Alphonse Interview In Kurtal
1.6.2023
கர்நாடகா காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்ட முயற்சி செய்தால் அதை தமிழக காங்கிரஸ் கண்டிப்பாக தடுத்து நிறுத்தும் என்று
மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றாலத்தில பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
பீட்டர் அல்போன்ஸ்
சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரூபாய் 13.54 லட்சம் மதிப்பில் 149 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளானது வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் குற்றாலத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற தீவிரமாக பாடுபட்டு வருகிறார். இதற்காக சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொழில் முதலீடுகளை திரட்டி வந்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் சனாதனத்தை ஆதரிப்பதோடு சனாதன கட்சியாகவே மாறி வருகின்றன 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு கூடுதல் உறுப்பினர்களை கொடுக்கவும் தென் மாநிலங்களில் உள்ள உறுப்பினர்களை குறைக்கவும் திட்டமிடுகின்றனர் இந்த பிரச்சனையை திசை திருப்பவே செங்கோல் நாடகம் அரங்கேற்றப்படுகிறது.
செங்கோல் என்பது முடியாட்சி தத்துவத்திலான அமைப்பு எனவும், மன்னர் வழிவந்து அரசு ஆள்பவர்களே செங்கோலை பயன்படுத்தினர். ஆனால் குடியாட்சி மூலம் ஆட்சி நடத்தியவர்கள் யாரும் செங்கோலை பயன்படுத்தியது இல்லை. செங்கோல் என்பது வெறும் விளம்பரத்திற்காக பாஜக அரசு ஏற்படுத்திய ஒரு மாயை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடகா காங்கிரஸ் அரசு அணை கட்ட முயற்சி செய்தால் அதை தமிழக காங்கிரஸ் கண்டிப்பாக தடுத்து நிறுத்தும் எனவும், மேகதாது பகுதியில் அணைக்கட்ட தமிழக அரசு அனுமதி மற்றும் ஒன்றிய அரசு அனுமதி கண்டிப்பாக பெறவேண்டும்.
அதேபோல், தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் எந்த ஒரு செயலையும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தற்போது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஒன்றிய அரசு எந்தவிதமான கவனமும் செலுத்தாமல் வாய்மூடி மௌனமாக இருப்பது வேடிக்கையாக உள்ளது. இதற்கு எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்ம நாதன், தென்காசி தென்காசி மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், அமீர்கான், சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், வைகுண்டராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், செய்யது சுலைமான், தேவேந்திரன், பிரபாகரன், வைகை குமார், தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், சபரி முருகேசன், இலக்கிய அணி தலைவர் ஏஎல்என்.ஆறுமுகம், சிவாஜி மன்ற தலைவர் என் கணேசன், செங்கோட்டை ராம் மோகன் அப்துல் காதர், குற்றாலம் திமுக செயலாளர் குட்டி, குற்றாலம் திமுக பேரூராட்டி மன்ற உறுப்பினர் கிருஷ்ணராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.