June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

மேலப்பாவூரில் மாணவர்கள் மீது தாக்குதல்- இருதரப்பினர் மோதல்

1 min read

Attack on students in Melapavoor – Clash between two sides

9.6.2023
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூரில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் தென்காசி மாவட்ட எஸ்.பி. சாம்சன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

மாணவர்கள் மீது தாக்குதல்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் பகுதியில் ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் டியூசன் படிப்பதற்காக கீழப்பாவூருக்கு சென்றுள்ளனர். அப்போது மற்றொரு பிரிவை சார்ந்த சிலர் அவர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மூன்று மாணவர்களும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த மாணவர்கள் தரப்பினர் மாணவர்களை தாக்கிய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மேலப்பாவூர் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சனீ ஆலங்குளம் துணை கண்காணிப்பாளர் பர்ணாட், ஏடிஎஸ்பி.தெய்வம் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி, தென்காசி இன்ஸ்பெக்டர் கே.எஸ்.பாலமுருகன், மற்றும் போலீசார் அங்கு சென்று இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மேலும் அங்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.