June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரத்தில் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

1 min read
Seithi Saral featured Image

Motorcycle collides with auto in Pavurchatra, teenager dies

13.6.2023
பாவூர்சத்திரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.

விபத்து

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் சடையப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 22). இவரது நண்பர் மகேஷ்(20). இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெல்லை-தென்காசி நான்கு வழிச் சாலையில் பாவூர்சத்திரம் அடுத்துள்ள ராமச்சந்திர பட்டணம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை யோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மகேசுக்கு தலையில் அடி பட்டு காது வழியே ரத்தம் வழிந்தது. மேலும் மகேந்திரனுக்கு 2 கால்களும் முறிந்தன. உடனே அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வர வழைத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளும், சாலையோரம் நின்ற ஆட்டோவும் முற்றிலும் சேதம் அடைந்தது. இதற் கிடையே மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு 2 பேரும் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சில நிமிடங்களிலேயே மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.