தென்காசியில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ் செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்பு
1 min read
Adoption of Tenkasi Anti-Elderly Day Pledge Language
16.6.2023
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதியோர் களுக்கு எதிரான கொடுஞ் செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி மாவட்டஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் எடுக்கப்பட்டது
இதன் பின்னர் சமூக நலத்துறையின் சார்பாக முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரையில் நடத்தப்பட்டது. இதில் ஊதா நிற ரிப்பன் மற்றும் கொடுஞ்செயல் எதிர்ப்பு வாசகம் பொறிக்கப்பட்ட அட்டைகள் உபயோகப் படுத்தப்பட்டது.
இந்த பேரணியில் மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி பே.மதி வதனா, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்) முத்து மாரியப்பன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியம், களப் பணியாளர்கள், சகி ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் முதலான சுமார் 50 நபர்கள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முதியோர்களுகு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தொடர்பான பேனர்கள் காட்சிப்படுத்தப் பட்டது. முதியோர் உதவி எண் 14567 தொடர்பான துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப் பட்டது..