பாஜக ஆளும் மாநிலத்தில்அமலாக்கத் துறை சோதனை நடந்தது உண்டா? -குற்றாலத்தில் திருநாவுக்கரசர் கேள்வி
1 min read
Did the enforcement department check in the BJP-ruled state? – Thirunavukkarasar MP question in Kutalal
17.6.2023
பாஜ ஆளும் மாநிலத்திலோ, பாஜ ஆதரவு பெற்று ஆளுகின்ற மாநிலத்திலோ அமலாக்கத்துறையின் சோதனைகள் நடந்தது உண்டா? என்று காங் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருநாவுக்கரசர்
குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி பத்திரிக்கை யாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
நீதி, சட்டம் அனைவருக்கும் பொதுவானது தான் லஞ்சம் லாவன்யங்கள் ஒழிக்கப்பட வேண்டிய விஷயம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதே வேளையில் பாஜ ஆளுகின்ற மாநிலத்திலோ, பாஜ ஆதரவு பெற்று ஆளுகின்ற மாநிலத்திலோ இதுபோன்ற அமலாக்க துறையின் சோதனைகள் நடைபெற் றது உண்டா? காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலத்திலும், காங்கிரஸோடு கைகோர்த்து நிற்கும் கட்சிகள் ஆளுகின்ற மாநிலத்தி லும் அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது
பாஜக ஆளுகிற மாநிலத்திற்கும் பாஜகவை ஆதரிக்கின்ற கட்சி ஆளும் மாநிலத்திற்கும் ஒரு சட்டம் காங்கிரஸ் ஆளுகிற மாநிலங்கள் காங்கிரசை ஆதரிக்கிற கட்சிகள் ஆள்கிற மாநிலங்கள் ஒரு சட்டம் என்று பார்ப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக இருந்திருக்கலாம் .அரசிய லுக்கு புதிதாக வந்துள்ள தால் தான் உரிய காரணங்கள் இல்லாமல் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்து வருகிறார்.
அதிமுகவுடன் கூட் டணி வைத்துக்கொண்டு அதிமுக ஆதரவோடு 4 எம்எல்ஏக்களை பெற் றுள்ளனர் மக்களவை தேர்தலில் கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா ஆகியோர் அறிவித் துள்ளனர்.’
இரண்டு கட்சிகளின் தலைவர்களும் கூட்டணி தொட ரும் என்று சொல்லும் போது இங்கு இருக்கும் மாநிலத் தலைவர் அண் ணாமலை தனது இஷ்டம் போல் நான் தான் செயல்படுவேன்.
என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. முடிந்தால் என்னை நீக்கிக் கொள்ளுங்கள் என சவால் விடுவது டிராமா போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.