சிவகிரி காவல் நிலையத்தில் தாக்குதல் சம்பவத்தில் 6 பேருக்கு ரூ.1,50,000 இழப்பீடு.
1 min read
In the incident of attack at Sivagiri police station 1,50,000 compensation to 6 people
18.6.2023
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் விசாரணையின் போது தாக்கப்பட்ட ஆறு நபர்களுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவுபடி ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா துரைச்சாமியாபுரம் இந்திரா காலனியில் சர்வே எண் 327/26 இல் 2009 ஆம் ஆண்டு துரைச்சாமியாபுரம் பஞ்சாயத்து மூலம் அண்ணா மறுமலர்ச்சி சமூதாய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.
அதே ஊரைச் சேர்ந்த முகேஷ் மனைவி கற்பகத்திற்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிவகிரி வட்டாட்சியர் கிருஷ்ணவேல் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்..
இதனை எதிர்த்து வருவாய் துறைக்கு புகார் அளித்த இந்திரா காலனியை சார்ந்த சதீஸ்குமார், குருசாமி, சுரேஷ்குமார், தினேஷ் குமார், சங்கர் கணேஷ், மற்றும் கலேஸ்குமார் அவர்களை சிவகிரி காவலர்கள் காவல் நிலையத்தில் வைத்து வரமபை மீறி காவல் நிலையத்தின் கதவை அடைதது வைத்து அடித்து சித்திரவதைப்படுத்தியதை எதிர்த்து மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தனர்..
இதனை வழக்காக பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி இறுதியில் மனித உரிமை மீறல்கள் நடந்து இருப்பதை உறுதி செய்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா 25000/- வீதம் 1,50,000/- ரூபாய் இழப்பீடாக 31.10.2022 அன்று தீர்ப்பு வழங்கியது இந்த தீர்ப்பு கிடைத்த நான்கு வாரத்துக்குள் வழங்க இழப்பீடு தொகையை வழங்க உத்தரவிட்டது.
ஆனால் நான்கு மாதங்கள் ஆகியும் இழப்பீடுத் தொகை வழங்காததை எதிர்த்து 15/03/2023 அன்று மனுதாரர்களால் முதன்மை செயலாளருக்கு மனு அளிக்கப்பட்டது.
இதனை ஏற்று முதன்மை செயலாளர் அவர்கள் இழப்பீடு தொகையை வழங்க 20.03.2023 அன்று அரசாணை எண் 330 இயற்றினார்.
இதனை தொடர்ந்து தமிழக காவல்துறை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு அவர்கள் 19.05.2023 அன்று இழப்பீடு தொகையை உடனே வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடிதம் அனுப்பியதை தொடர்ந்து 17.06.2023 அன்று மனித உரிமை ஆணையம் அறிவித்த நிவாரண தொகையை பணமாக மனுதாரர்கள் பெற்றுக்கொண்டார்கள்..
.