தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்து வருகிறோம்- அமைச்சர் முத்துசாமி தகவல்
1 min read
We are taking steps to close 500 liquor shops in Tamil Nadu – Minister Muthusamy informed
19.6.2023
தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டாஸ்மாக்
கள்ளச்சாராயத்தை தடுக்க முதலமைச்சர் ஆலோசனைகள் வழங்கி உள்ளார். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பில் இருதரப்பு விவசாயிகளும் சமாதானமாக செல்ல வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எந்த தரப்பிற்கும் நாங்கள் ஆதரவாக இல்லை. இதில் சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும் அது தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் தவறு ஏதும் நடக்கவில்லை. டாஸ்மாக் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைப்பதற்காக இலக்கு நிர்ணயிப்பதில்லை. தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை குறைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.