June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 min read

Increase in number of Group 4 Examination Vacancies

20.6.2023
குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

குரூப் 4 தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பலவேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது.
7,301 காலிப் பணியிடங்களுக்குத் இத்தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி வெளியானது.
முதலில் 7,301 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்திய நிலையில் டிஎன்பிஎஸ்சி பின்னர் மறு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு 10,117 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்தது.

அதிகரிப்பு

ஆனால் காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், இரண்டாவது முறையாக குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது .அதன்படி எண்ணிக்கை 10,117ஆக இருந்த நிலையில், தற்போது 10,748ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.