பாவூர்சத்திரத்தில் ரூ.72.55 லட்சம் மதிப்பில் நாட்டின நாய்கள் பாதுகாப்பு- ஆராய்ச்சி மையம் கட்டுமான பணிகள் தொடக்கம்
1 min read
Construction work of National Dog Protection-Research Center started at Bhavoorchatra at a cost of Rs.72.55 lakh
1.7.2023
பாவூர்சத்திரத்தில் ரூ.72.55 லட்சம் மதிப்பில் நாட்டின நாய்கள் பாதுகாப்பு- ஆராய்ச்சி மையம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.
நாய்கள் மையம்
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பாவூர்சத்திரம் கால்நடை வளாகத்தில் ரூ. 72.55 லட்சம் மதிப்பில் நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
பாதுகாப்பு-ஆராய்ச்சி மையம் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நாட்டின நாய்களான ராஜபாளையம், சிப்பிபாறை, கன்னி, கோம்பை ஆகியனவற்றை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் 2022-23-ம் நிதியாண்டில் ரூ. 72.55 லட்சம் மதிப்பில் தென்காசி மாவட்டத்தில் நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவின் போது பாவூர்சத்திரம் கால்நடை மருந்தகம் வளாகத்தில் கட்டப்படும் நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிட கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிர்வாக அனுமதி அதனை தொடர்ந்து நிர்வாக அனுமதி பெறப்பட்டு கட்டிடம் கட்டுமான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு நாட்டின நாய்களின் பாதுகாப்பு மையம் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் பேசினார். கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக உற்பத்தி கல்வி மைய இயக்குநர் மீனாட்சி சுந்தரம், நாட்டின் நாய்கள் ஆராய்ச்சி மைய தலைவர் ரவிமுருகன், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, துணை சேர்மன் முத்துக்குமார், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன், கீழப்பாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் தங்கரத்தினம், குமார்பாண்டியன், கீழப்பாவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜசேகர், காங்கிரஸ் ஐ.என்.டி.யூ.சி. மாநில செயலாளர் வைகுண்டராஜா, குலசேகரபட்டி ஊராட்சி தலைவர் முத்துமாலை அம்மாள் மதிச்செல்வன், துணை தலைவர் திருவளர்ச்செல்வி சாமி ராஜா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் நாட்டின நாய்கள் வளர்க்கும் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.