தென்காசியில் ஆன்லைனில் இழந்த ரூ.7 லட்சம், 80 செல் போன்கள் மீட்பு
1 min read
Rs 7 lakh lost online, 80 cell phones recovered in Tenkasi
1.7.2023
தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் இயக்குநர் சஞ்சய்குமார், உத்தரவுபடியும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் மற்றும் சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தேவராணி ஆகியோர்களின் அறிவுரைகளின் படி தென்காசி மாவட்டம் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.தனராஜ் கணேஷ் தலைமையில். காவல் ஆய்வாளர் எம்.ஜோஸ்லின் அருள்செல்வி, உதவி ஆய்வாளர்கள் எஸ்.சிவசங்கரி, எஸ்.செண்பக பிரியா மற்றும் சைபர் கிரைம் காவலர்களின் தீவிர முயற்சியால் தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்த நபர்களின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் செய்யப்பட்ட தொகை ரூ.9,17,08,500/- ஆகும். இதில் பணத்தை முடக்கம் இழந்தவர்களுக்கு மீட்டுக் கொடுக்கப்பட்ட தொகை ரூ.31,67,196/- ஆகும்.
30.06.2023 சைபர்கிரைம் மூலம் பணத்தை இழந்த 4 நபர்களின் மொத்த தொகை ரூ.7,28,946/- மீட்கப்பட்டும். மேலும் காணாமல் போன விலை உயர்நத சுமார் ரூ.13,00,000/- (பதின்மூன்று இலட்சம்) மதிப்புள்ள செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த
சாம்சன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலமாக இதுவரை 533 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.83,00,000/- (என்பத்தி மூன்று இலட்சம்) ஆகும்.
ஆன்லைன் மூலம் இழந்த பணத்தையும், தாங்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்டுக் கொடுத்த தென்காசி மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.