June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கடலில் பேனா நினைவு சின்னம் வழக்கு 7-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 min read

Pen monument at sea case adjourned till 7th- Supreme Court orders

3.7.2023
சென்னை மெரினாவில் பேனா நினைவுச்சின்னத்தை எதிர்த்த வழக்குகளை ஜூலை 7-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்தது.

பேனா நினைவு சின்னம்

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்திலும் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது.
பேனா சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, அதிமுக மற்றும் மீனவர்கள் அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒத்தி வைப்பு

இந்தநிலையில், சென்னை மெரினாவில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்டு. சென்னை மெரினா கடலில் பேனாநினைவு சின்னம் அமைப்பதை ஏதிர்த்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்தது. வழக்கில் தேவையான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பேனா நினைவுச் சின்னத்துக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த இடையீட்டு மனுவும் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.