June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் கோவில் ஆனித்திருவிழா

1 min read

Vasudevanallur Chintamani Nathar Temple Anniversary

3.7.2023
தென்காசி மாவட்டம்வாசுதேவநல்லூர் அருள்மிகு சிந்தாமணி நாதர் (அர்த்தநாரீஸ்வரர்)கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்கள் இன்று தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது

வாசுதேவநல்லூரில் அருள்மிகு இடப்பாக வல்லி அம்பாள் சமேத சிந்தாமணி நாதர் சுவாமி என்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் உமையொரு பாகனாக உருவம் தரித்து மெய்யன்பர்களுக்கு அருள் வழங்கும் ஸ்தலங்கள் தமிழகத்தில் இரண்டு மட்டுமே உள்ளது அவ்விரண்டு திருத்தலங்களுள் வாசுதேவநல்லூர் கோவில் ஒன்றாகும்பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா ஜூன் 2 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து சுவாமி, அம்மாளுக்கு சிறப்பு பூஜைகள், திருக்கல்யாணம் திருவீதி உலா, பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது lவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா நேற்று காலை 7:45க்கு அம்மையப்பர்க்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூசை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருத்தேரில் எழுந்தருளி காட்சி கொடுத்தார் தேர் வடம் தொடுதல் நிகழ்ச்சியில் மண்டபதார் எஸ்டி கல்வி நிறுவனங்களில் நிறுவனர் எஸ் தங்கப்பழம் குடும்பத்தார் கல்வி நிறுவனங்களில் தாளாளர் எஸ்டி முருகேசன் குடும்பத்தார் கலந்து கொண்டனர் திருத்தேர் அலங்காரம் மண்டகப்படி தாரர் எஸ் தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் எஸ் தங்கப்பழம் குடும்பத்தினர் சார்பில் பகல் 2 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் எஸ்டி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தங்கப்பழம் தாளாளர் எஸ் டி முருகேசன் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் முன்னாள் தலைவர் தவமணி சுமங்கலி சமுத்திர வேலு மற்றும் கோயில் நிர்வாகிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.நான்கு ரத வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து மாலை 4 மணி அளவில் கோயிலை அடைந்தது தேர் நிலையம் வந்து சேர்ந்ததும் திருவாடுதுறை ஆதினம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.இரவில் 10 மணி அளவில் அம்மையப்பர் தேர் தடம் பார்க்க வெட்டும் குதிரையில் வீதி உலா நடைபெற்றது விழாவில் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து ஏராளமான கலந்து கொண்டனர்.

புளியங்குடி டிஎஸ்பி அசோக் தலைமையில் வாசு இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்பட 250க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது இன்று திங்கள் கிழமை பத்தாம் திருநாள் அன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. அம்மையப்பர் கனக வாகனத்தில் திருவீதி உலா குருக்கள் ஐயா சார்பில் நடைபெறுகிறது. மாலை ஆறு மணி அளவில் இல்லத்து பிள்ளைமார் சமுதாய சார்பில் சப்தா வரணம் ரிஷப வாகனத்தில் அம்மையப்பர் திருவீதி உலா நடைபெறுகிறது. இரவு 10 மணி அளவில் நாடார் உறவில் முறைசார்பில் தெப்ப தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் முருகன் lகோயிலில் நிர்வாக அலுவலர் கார்த்திசெல்வி மற்றும் உபயதாரர்கள் மண்டகப்படி தாரர்கள் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.