தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள்-கலெக்டர் தகவல்
1 min read
Essay, Speech Competitions for School Students in Tenkasi District-Collector Information
9.7.2023
தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்படுகிறது.
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை மறுநாள்( செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற உள்ளது. ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் பங்கு பெறலாம். போட்டிக்கான தலைப்புகள் வருமாறு.
கட்டுரை போட்டி – தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்.
பேச்சுப் போட்டி – தமிழ்த் திரை உலகத்தை புரட்டி ப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம்,3-வது பரிசு ரூ.5 ஆயிரம் என பரிசுதொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்க ளுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, 0462- 2502521 என்ற தொலைபேசி எண்ணி லோ தொடர்பு கொள்ளலாம்.இந்த போட்டிகளில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.