பண்பொழி கோவிலில் ஏழை மணமக்களுக்கு திருமணம்
1 min read
Poor brides get married in Panbozhi temple
9.7.2023
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி திருக்கோவில்களின் சார்பில் திருமண விழா திட்டத்தின் கீழ் பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோயிலில் வைத்து ஏழை மணமக்களுக்கு திருமண விழா நடந்தது.
மணமகன்முத்துராசு , மணமகள் சிவசங்கரி எனபவருக்கும் சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு திருமண விழா மண்டல இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் கோமதி தலைமையில் நடந்தது.
இதில் இந்து அறநிலை துறை சார்பில் திருமண பெண்ணிற்கு தாலி, முகூர்த்த புடவை ,மணமகனுக்கு பட்டு ஜரிகை வேட்டி ,துண்டு ,சட்டை அணிவித்து திருமணம் நடைபெற்றது, மணமக்க ளுக்கு சீர்வரிசை பொருட்களாக குத்துவிளக்கு, கட்டில், பீரோ, மெத்தை, சில்வர் குடம், மிக்ஸி போன்ற சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டு மணமக்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு விருந்தளிக்கப்பட்டது.
இந்த திருமண விழா ஆலங்குளம் சரக ஆய்வர் சேதுராமன், தென்காசி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.என்.எல். சுப்பையா. அறங்காவலர் குழு உறுப்பினர்கள் காலசாமி, வேல்முருகன், சண்முக வடிவு, ஜெயக்குமார் பாண்டியன், பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவர் கரிசல் அ. இராஜராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மண்டல இணை ஆணையர் அன்புமணி செயல் அலுவலர் கோமதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.என்.எல்.சுப்பையா பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவர் கரிசல் அ.இராஜராஜன், மாவட்ட
அறங்காவலர் குழு உறுப்பினர்கள் காலசாமி, வேல்முருகன், சண்முக வடிவு, ஜெயக்குமார் பாண்டியன், ஆகியோர் மணமக்களுக்கு அன்பளிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள்
கோயில் பணியாளர்கள்,
பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.