தென்காசி மாவட்ட கலை இலக்கியபகுத்தறிவுபேரவைதலைவர் நியமனம்
1 min read
Tenkasi District Art Literary Rationale Chairman Appointment
9.7.2023
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராக, செங்கோட்டையை சேந்த முன்னாள் நகர திமுக செயலாளர் பெரு.முத்தையா தேவர் மகனும் , கலைஞர் தமிழ்ச்சங்க செயலாருமான வழக்கறிஞர் மு. ஆபத்துக்காத்தான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வாகை சந்திரசேகர்
நேற்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து நேற்று வழக்கறிஞர் மு ஆபத்துக் காத்தான் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதனை நேரில் சந்தித்து கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
அதனைத்தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மு.ஆபத்து காத்தானுக்கு கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஏ.எம். ஷெரிப்,தென்காசி தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மாரியப்பன், செங்கோட்டை நகரத் துணைச் செயலாளர் ஜோதிமணி,பெர்னாட்ஷா, நாட்டாமை ஆறுமுகம், வேலுமணி, ஓம் சக்தி ஐயப்பன், ராமகிருஷ்ணன், திருமால், டைல்ஸ் மாரியப்பன் ,ஆசிரியர் மணிகண்டன்,ரமேஷ் ,வேல் சாமி, கன்னன் , பட்டையா, அண்ணாதுரை, நடராஜன் , சரவணன், கணேசன் , ரெங்கன் செங்கோட்டை வார்டு திமுக நிர்வாகிகள் கலைஞர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.